எண்ணம் செயலில் வேற்றுமை இல்லை
பிறப்பில் இறப்பில் மாற்றம் இல்லை
மனம் போகும் போக்கில் பேடகம் இல்லை
உண்ணும் உணவில் வேற்றுமை உண்டு
புறத்தில் நிறத்தில் வித்தியாசம் உண்டு
மொழியில் பேச்சில் பிரிவு உண்டு
மதத்தில் இறை நம்பிக்கையில் வேடகம் உண்டு
இறைவன் மனிதனாய் உருவெடுத்தான்
அன்பும் அறமும் போதித்தான்
போதனையின் சாரம் அதை மறந்த மனிதன்
அவ்வுருவை தெய்வமாக்கினான்
மதங்கொண்டு மதம் படைத்தான்
அவ்வேற்றுமையால் பல போர் வளர்த்தான்
குணம் கெட்டு மதியும் இழந்தான்
இறைக்கு தன்னையே இரை ஆக்கினான்
இறைவன் எங்கும் எதிலும் உளன் , சொன்னவர் பலர்
உன்னிலும் உள்ளான் அவன், இதை நீ உணர்
எல்லா உயிரிலும் அன்பு செலுத்து
இறையை சேர்வது உன் தலை எழுத்து
----------------------------------------------
nakulan
 
No comments:
Post a Comment