Saturday, September 20, 2008

உடல்

உடல் உயிருக்கு ஆதாரம்
உண்மையில் மிகப்பெரிய பாரம்
உடல் இன்றி உயிர் என்ன செய்யும்?
யாரும் அறியார்
உயிர் இன்றி உடல் என்ன ஆகும்?
யாவரும் அறிவார்
உடலின் பெரும் பாகம் அறிவோம்
உயிரின் ஒரு பாகம் கூட அறியோம்

உடலை இய்க்கும் உயிர்
உயிரை இயக்குவது கர்ம விதியோ?
இல்லை இறைவனோ?
இல்லை அவனின் பிரதிநிதியோ?

எப்பொழுது உடலைப்புகும்
எப்பொழுது உடலைவிடும்
தற்பொழுது அறியான் மனிதன்
முப்பொழுதும் அறிவான் புனிதன்
-------------------------------------------
நகுலன்


No comments: