Showing posts with label religion. Show all posts
Showing posts with label religion. Show all posts

Thursday, September 18, 2008

சுவாசிக்கும் காற்று வேறு இல்லை

சுவாசிக்கும் காற்று வேறு இல்லை
எண்ணம் செயலில் வேற்றுமை இல்லை
பிறப்பில் இறப்பில் மாற்றம் இல்லை
மனம் போகும் போக்கில் பேடகம் இல்லை

உண்ணும் உணவில் வேற்றுமை உண்டு
புறத்தில் நிறத்தில் வித்தியாசம் உண்டு
மொழியில் பேச்சில் பிரிவு உண்டு
மதத்தில் இறை நம்பிக்கையில் வேடகம் உண்டு

இறைவன் மனிதனாய் உருவெடுத்தான்
அன்பும் அறமும் போதித்தான்
போதனையின் சாரம் அதை மறந்த மனிதன்
அவ்வுருவை தெய்வமாக்கினான்

மதங்கொண்டு மதம் படைத்தான்
அவ்வேற்றுமையால் பல போர் வளர்த்தான்
குணம் கெட்டு மதியும் இழந்தான்
இறைக்கு தன்னையே இரை ஆக்கினான்

இறைவன் எங்கும் எதிலும் உளன் , சொன்னவர் பலர்
உன்னிலும் உள்ளான் அவன், இதை நீ உணர்
எல்லா உயிரிலும் அன்பு செலுத்து
இறையை சேர்வது உன் தலை எழுத்து

----------------------------------------------
nakulan