Saturday, November 8, 2008

உறுதி கொடு

பூவை கனியை பறிக்க பறிக்க
சற்றும் மனம் தளராமல்
பூத்துக்காய்த்துக்கொண்டே இருக்கும்
செடியை போல

கிளை வேரை வெட்ட வெட்ட
சற்றும் துயர் அடையாமல்
வளர்ந்து கொண்டே இருக்கும்
மரத்தை போல

ஆதாரத்தை மாற்ற மார்ர்ர்ர்
சற்றும் சலிப்பு அடையாமல்
கிடைத்ததைப்பற்றி முன்னேறிக்கொண்டே இருக்கும்
கொடியை போல

எதை இழந்தாலும்
எது நடந்தாலும்
எது மாறினாலும்
முன்னேற மட்டுமே சிந்திக்க செயலாற்ற
உறுதி கொடு
இறைவா!
இறுதி வரை உறுதி கொடு!
-------------------------------------------
நகுலன்

No comments: