Saturday, November 8, 2008

உறுதி கொடு

பூவை கனியை பறிக்க பறிக்க
சற்றும் மனம் தளராமல்
பூத்துக்காய்த்துக்கொண்டே இருக்கும்
செடியை போல

கிளை வேரை வெட்ட வெட்ட
சற்றும் துயர் அடையாமல்
வளர்ந்து கொண்டே இருக்கும்
மரத்தை போல

ஆதாரத்தை மாற்ற மார்ர்ர்ர்
சற்றும் சலிப்பு அடையாமல்
கிடைத்ததைப்பற்றி முன்னேறிக்கொண்டே இருக்கும்
கொடியை போல

எதை இழந்தாலும்
எது நடந்தாலும்
எது மாறினாலும்
முன்னேற மட்டுமே சிந்திக்க செயலாற்ற
உறுதி கொடு
இறைவா!
இறுதி வரை உறுதி கொடு!
-------------------------------------------
நகுலன்

விதைத்ததெல்லாம் முளைப்பதில்லை

விதைத்ததெல்லாம் முளைப்பதில்லை
முளைத்ததெல்லாம் வளர்வதில்லை
வளர்ந்ததெல்லாம் பூப்பதில்லை
பூத்ததெல்லாம் காய்ப்பதில்லை
காய்த்ததெல்லாம் பழுப்பதில்லை
பழுத்ததெல்லாம் பிழைப்பதில்லை
பிழைத்ததெல்லாம் விதையாவதில்லை
விதைத்ததெல்லாம் முளைப்பதில்லை

வாழ்க்கை என்னும் நாடகத்தில்
அடுத்த கட்டம் யாரிடத்தில்?
என்ன நடக்கும் எது நடக்கும் என்று
தவறவிட்டார் பொன்னான நாள் இன்று
வருந்துபவர் உணருவதில்லை
உணர்ந்தவர் வருந்துவதில்லை
இறை எதுவாயினும் சேர்மின்!
நிறையான வாழ்க்கை கொண்மின்!

--------------------------------------------------------
நகுலன்