Saturday, November 8, 2008

விதைத்ததெல்லாம் முளைப்பதில்லை

விதைத்ததெல்லாம் முளைப்பதில்லை
முளைத்ததெல்லாம் வளர்வதில்லை
வளர்ந்ததெல்லாம் பூப்பதில்லை
பூத்ததெல்லாம் காய்ப்பதில்லை
காய்த்ததெல்லாம் பழுப்பதில்லை
பழுத்ததெல்லாம் பிழைப்பதில்லை
பிழைத்ததெல்லாம் விதையாவதில்லை
விதைத்ததெல்லாம் முளைப்பதில்லை

வாழ்க்கை என்னும் நாடகத்தில்
அடுத்த கட்டம் யாரிடத்தில்?
என்ன நடக்கும் எது நடக்கும் என்று
தவறவிட்டார் பொன்னான நாள் இன்று
வருந்துபவர் உணருவதில்லை
உணர்ந்தவர் வருந்துவதில்லை
இறை எதுவாயினும் சேர்மின்!
நிறையான வாழ்க்கை கொண்மின்!

--------------------------------------------------------
நகுலன்

No comments: